பஞ்சகாவ்யா
1.பஞ்சகாவ்யா (Panchakavya )
பஞ்சகாவ்யா ஒரு அங்கக பொருள். இது செடியின் வளர்ச்சியை உயர்த்தியும் மற்றும் நோய் பற்றாநிலையை கொடுக்கும். பஞ்சகாவ்யாவில் ஒன்பது வகையான பொருட்கள் உள்ளன. அவை பின்வருமாறு மாட்டுச்சாணம், மாட்டு சிறு நீர், பால், தயிர், வெள்ளம், நெய், வாழை, இளநீர் மற்றும் தண்ணீர். இவைகளை சரியாகக் கலந்து பயன்படுத்தினால் அதிசயமான தீர்வைக் காணலாம்.
- மாட்டுச்சாணம் – 7 கிலோ
- மாட்டு நெய் – 1 கிலோ
இந்த இரண்டு பொருட்களையும் நன்றாக காலை மற்றும் மாலை நேரங்களில் கலக்கி மூன்று நாட்கள் வரை வைக்கவும்.
- மாட்டு சிறு நீர் – 10 லிட்டர்
- தண்ணீர் – 10 லிட்டர்
மூன்று நாட்கள் கழித்து மாட்டு சிறுநீர் மற்றும் தண்ணீரை இதனுடன் கலக்கி தினமும் காலை மற்றும் மாலை நேரங்களில் நன்றாகக் கலக்கி 15 நாட்கள் வரை வைக்கவும். 15 நாட்கள் கழித்து கீழே கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை அதனுடன் வைத்தால் 30 நாட்களுக்குள் பஞ்சகாவ்யா தயாராகிவிடும்.
மேலே கொடுக்கப்பட்டுள்ள அனைத்து பொருட்களையும் மண் பானை, கற்காரை தொட்டி அல்லது பிளாஸ்டிக் கேன்களில் மேலே கொடுக்கப்பட்டுள்ள வரிசைகளில் சேர்க்கவும் கொள்கலனை நிழலில் திறந்து வைக்கவும். உட்பொருளை நாளொன்றிற்கு இருமுறை காலையும், மாலையும் கொதிக்க வைக்கவும். 30 நாட்களுக்கு பிறகு பஞ்சகாவ்யா கரைசல் தயாராகிவிடும். இதை தயாரிக்கும் போது எருமையுடைய பொருட்களை கலக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும். உள்ளூர் மாடுகளை விட வெளிநாட்டு மாடுகளுக்கு ஆற்றல் அதிகம். இதனை நிழலில் தான் வைக்கவும். கம்பி வலைக்கண் அல்லது பிளாஸ்டிக் கொசு வலையை அதன் மேல் மூடி வைக்கவும் ஈக்கள் முட்டை இடுவது மற்றும் கரைசலில் ஈ இன காலில்லா புழுக்கள் உருவாவதை தடுக்க(-). கரும்பு சாறு இல்லையென்றால் 500 கிராம் வெள்ளத்தை மூன்று லிட்டர் தண்ணீரில் கலக்கி பயன்படுத்தலாம்.
பஞ்சகாவ்யாவின் இயல்பு வேதிப்பொருள் மற்றும் உயிரியல் பொருட்கள்
பஞ்சகாவ்யாவிற்கு தேவையானவை | ||||||||||||
சாணம் | கோமியம் | நெய் | பால் | தண்ணீர் | ||||||||
|
|
|
பஞ்சகாவ்யாவின் இயல்பு வேதிப்பொருள் மற்றும் உயிரியல் பொருட்களில் முக்கியமான ஊட்டப்பொருள், நுண் ஊட்டப்பொருள் மற்றும் வளர்ச்சிப் பொருள்கள், நுண் ஊட்டப்பொருள் மற்றும் வளர்ச்சிப் பொருள்கள் (IAA & GA) உள்ளன. நுண்ணுயிரியை நொதித்தல் அதாவது ஈஸ்ட், லேக்கேடாபேசில்லஸ் இணைந்து அமில நிலையை குறைத்துவிடும். பால் பொருட்கள் மற்றும் வெள்ளம்/கரும்பு சாறினை சேர்த்தால் வளர்வதற்கு உருதுணையாக இருக்கும்.
லேக்டோபேசில்லஸில் நன்மை பயக்கும் வளர்ச்சிதைப்பில் உருவாகும். அவை பின்வருமாறு அங்கக அமிலம், ஹைட்ரஜன் பெராக்சைடு மற்றும் எதிர் உயிரிப்பொருள்களை உருவாக்கும். இவை மற்ற நோய் விளைவிக்கும் நுண்ணுயிரிக்கு எதிர்ப்பாக செயலாற்றும். ஜி.சி.-எம்.எஸ். பகுப்பாய்வில் உள்ள கூட்டுகள் பின்வருமாறு, கொழுப்பு அமிலம், அல்க்கேன், அல்கோனால் மற்றும் அல்கஷால்
கொழுப்பு அமிலம் | அல்க்கேன் | அல்கோனால் மற்றும் ஆல்கஹால் |
ஒலிக் அமிலம் | டெக்கேன் | ஹெப்டனோல் |
பால்மிட்டிக் அமிலம் | ஆக்டேன் | டெட்ராகாசனோல் |
மிரிஸ்டிக் | ஹெக்சாடிக்கேன் | ஹெக்சாடிகனோல் |
டிகோனோர் | ஒரிடிக்கேன் | ஆக்டாடிகனோல் |
டெக்கனாமிக் | மெத்தனால் | |
ஆக்டனோயிக் | ப்ரொப்னால், ப்யுட்டனால் மற்றும் எத்தனால் | |
ஹெக்சனோயிக் | ||
ஆக்ட்டாடிக்கனோயிக் | ||
டெட்ராடிக்கனோயிக் | ||
அசிட்டிக், ப்ரோப்பியோனிக், ப்யுட்டிரிக், கேப்ராயிக் மற்றும் வலரிக் அமிலங்கள் |
3.வணிகப் பயிரில் பஞ்சகாவ்யாவின் நன்மை பயக்கும் விளைவுகள்
- பெண் பூக்களில் அடர்ந்த பூக்கள் உருவாவதற்கு தூண்டப்படும்
- ஒழுங்கற்ற அல்லது மாறி அமைந்த தாங்கியின் வழக்கம் இதில் ஏற்படாது. இது பூக்களில் மட்டுமல்லாது பழங்களிலும் தான்.
- 12 நாட்கள் வரை அரையுடைய வெப்பநிலையில் வைத்தால் நல்ல தரத்தை அதிகப்படுத்த உதவும்.
- நறுமணம் மற்றும் மணம் அதிக அளவில் இருக்கும்
எலுமிச்சை:
- வருடம் முழுவதும் தொடர்ச்சியாக பூக்கள் பூர்த்துக் கொண்டே இருக்கும்
- பழங்கள் நல்ல மணத்துடனும், சதையுடனும் இருக்கும்
- 10 நாட்களுக்கு இதனுடைய வாழ்வு உயர்த்தப்படும்
கொய்யா:
- அதிகப்படியான மொத்த தின்மக் கரைசல்
- ஐந்து நாட்களுக்கு இதனுடைய வாழ்வு உயர்த்தப்படும்
வாழை:
(3% கரைசல் (100 மி.லி.) நீர்ப்பாசன தண்ணீர் (-) கரைசலுடன் தெளித்து ஆண் மொட்டுக்களை அகற்றிய பின் குலையின் கொப்பூழுடன் சேர்த்து கட்டவும். குலையின் அளவு ஒரே சீராக இருக்கும். ஒரு மாதத்திற்கு முன்பு அறுவடை செய்யப்பட்டிருக்க வேண்டும். மேல் மற்றும் கீழே உள்ள கைகள் ஒரே சீராக பெரியதாக இருக்கும்.
மஞ்சள்:
- 22% மகசூல் அதிகமாகும்
- மஞ்சளின் அளவு பெரியதாக இருக்கும்
- குறைந்த வடிகால் சேதாரம்
- தாய் மற்றும் விரல் வேர்த்துண்டுகளின் விகிதம் குறுகி இருக்கும்
- தும்பி, சிலந்தி ஆகிய பூச்சிகளின் எண்ணிக்கையை குறைத்து நோயின் தாக்கத்தைக் கட்டுப்படுத்தப்படும்
- தாய் விதை வேர்த்துண்டுகளை தவணைக் கட்டணத்தில் விற்கப்படுகின்றன
-
மஞ்சளின் உட்பொருள்களை அதிகப்படுத்த உதவும்
மல்லிகை:
- அதிகப்படியான மணம் மற்றும் நறுமணம்
- மொட்டுப் புழுக்களின் பாதிப்பு இருக்காது
- வருடம் முழுவதும் பூக்கள் பூர்த்துக் கொண்டே இருக்கும்
காய்கறிகள்:
- மகசூல் 18% உயர்ந்து காணப்படும். சில சமயங்களில் வெள்ளரியின் மகசூல் இரட்டிப்பாகக் காணப்படும்.
- ஆரோக்கியமான காய்களின் மேல் தோல்கள் பளபளப்பாக இருக்கும்
- இதனுடைய வாழ்வு நீட்டிக்கப்பட்டிருக்கும்
- காய்கள் நல்ல சுவையாகவும், மணமாகவும் இருக்கும்
- பொதுவாக பஞ்சகாவ்யாவை அனைத்து பயிர்களுக்கும் 30% அளவு தழை தெளிப்பாக பயன்படுத்தப்படுகின்றது ( 3 லிட்டர் பஞ்சகாவ்யாவை 100 லிட்டர் தண்ணீரில் கலக்கவும்).
4.பரிந்துரைக்கப்பட்ட மருந்தளவு
தெளிக்கும் முறை
கரைசல் அதிகம் மற்றும் குறைந்த அளவு செறிவைக் காட்டிலும் 3% கரைசல் மிகவும் பயன்பாடு உள்ளது. ஒவ்வொரு 100 லிட்டர் தண்ணீரில் 3 லிட்டர் பஞ்சகாவ்யாவை சேர்த்துப் பயன்படுத்தினால் அனைத்து பயிர்களுக்கும் சிறந்தது. 10 லிட்டர் கொள்ளளவு உள்ள மின் தெளிப்பிக்கு 300 மி.லி/நொடி அளவு தேவைப்படும்.
மின் தெளிப்பானில் தெளிக்கும் போது வண்டல்கள் கீழே தங்கிவிடும். கைகளால் இயக்கப்படும் தெளிப்பானில் பெரிய துளைமுனை உள்ள தெளிப்பானை பயன்படுத்தவும்.
பாய்வு முறை
பஞ்சகாவ்யா கரைசலை நீர்ப் பாசன முறையில் 50 லி/ஹெக்டர் என்ற அளவில் கலந்து சொட்டுப்பாசனம் அல்லது பாய்வுப் பாசன முறையில் இதனை பாய்ச்சவும்.
விதை நாற்று நேர்த்தி
நடவு செய்வதற்கு முன்பு விதைகளை முக்கி வைக்க அல்லது நாற்றுகளை அமுக்கி வைக்க 3% பஞ்சகாவ்யா கரைசல் பயன்படுத்தப்படுகின்றது. 20 நிமிடங்கள் முக்கி வைத்தால் போதும், மஞ்சள், பூண்டு மற்றும் கரும்பு வேர்த்துண்டுகளை நடவு செய்வதற்கு முன் 30 நிமிடங்கள் இந்தக் கரைசலில் முக்கி வைக்க வேண்டும்.
விதை சேமிப்பு
விதைகள் உலர்வதற்கு முன்பும், சேமித்து வைப்பதற்கு முன்பும் 3% பஞ்சகாவ்யா கரைசலில் முக்கி வைக்கவும்.
முன் பூர்க்கும் பருவம் |
: |
15 நாட்களுக்கு ஒரு முறை, பயிரின் கால இடைவெளி பொருத்து 2 தெளிப்பு தெளிக்கவும் |
பூக்கும் மற்றும் இரு புறமும் வெடிகனி பருவம் |
: |
10 நாட்களுக்கு 2 தெளிப்பு |
பழம்/இருபுறமும் பழங்கள் வெடித்து முதிர்ச்சி அடையும் பருவம் |
: |
பழங்கள் வெடித்து முதிர்ச்சி அமையும் போது ஒரு முறை தெளிக்கவும் |
வெவ்வேறு பயிர்களில் பஞ்சகாவ்யாவை பயன்படுத்தப்படும் காலநிலை பின்வருமாறு
பயிர் | கால அட்டவணை |
நெல் | 10,15,30 மற்றும் 50வது நாட்களில் நாற்று நடுவதற்கு முன்பு பயன்படுத்தவும் |
சூரியகாந்தி | விதைத்தபின் 30, 45 மற்றும் 60 வது நாட்களில் தெளிக்கவும் |
உளுத்தப்பருப்பு | மானாவாரி: முதல் பூர்ப்பிற்கும், பூர்த்தி பின் 15 நாட்கள் கழித்தும் பயன்படுத்தவும் நீர்ப்பாசனம்: விதைத்தலுக்கு பின் 15, 25 மற்றும் 40வது நாட்களில் தெளிக்கவும் |
பச்சைப்பயிறு | விதைத்தலுக்குப் பின் 15, 25, 30, 40 மற்றும் 50 வது நாட்களில் பயன்படுத்தவும் |
ஆமணக்கு | விதைத்தலுக்குப் பின் 30 மற்றும் 45வது நாட்களில் பயன்படுத்தவும் |
நிலக்கடலை | விதைத்தலுக்குப் பின் 25 மற்றும் 30வது நாட்களில் பயன்படுத்தவும் |
வெண்டை | விதைத்தலுக்குப் பின் 30,45, 60 மற்றும் 75வது நாட்களில் பயன்படுத்தவும் |
முருங்கை | பூர்ப்பதற்கு முன்பும் மற்றும் இரு புறமும் வெடிக்கனி உருவாகும் நேரத்திலும் பயன்படுத்தவும் |
தக்காளி | நாற்றங்காலில் இருக்கும் பொழுதும் விதைத்த பின் 40வது நாளிலும் பயன்படுத்தவும் 1% கரைசலில்12மணி நேரத்திற்கு விதை நேர்த்தி செய்ய வேண்டும் |
வெங்காயம் | விதைத்தலுக்கு பின் 0,45 மற்றும் 60வது நாட்களில் பயன்படுத்தவும் |
ரோஜா | கவாத்து செய்யும் போதும், மொட்டுகள் வெளி வரும் போதும் பயன்படுத்தவும் |
மல்லிகை | மொட்டு அரும்பும் போது பயன்படுத்தவும் |
வனிலா | கரணைகளை விதைப்பதற்கு முன் பஞ்சகாவ்யாவில் முக்கி வைக்க வேண்டும் |
பஞ்சகாவ்யாவின் பயன்கள் (Benefits of Panchakavya)
இலை
பஞ்சகாவ்யாவை செடியின் மேல் தெளித்தால் பெரிய இலைகள் மற்றும் அடர்த்தியான மேற்கவிகையை உருவாக்கும். ஒளிச்சேர்க்கை முறை உருவாகி உயிரியல் திறன், கருத்தொகுப்பு அதிகளவ வளர்ச்சிதை மாற்றத்தை மற்றும் ஒளிச்சேர்க்கையை இயங்கச் செய்யும்.
தண்டு
அடிமரத்தின் அருகில் தண்டுகள் உருவாகும். அவைகள் வலிமையாகவும் மற்றும் அதிகப்படியான பழங்களை முதிர்ச்சியடையச் செய்யும். கிளைகள் பெரியதாகி வளரும்.
வேர்
வேர்கள் மட்டுமீறியும், அடர்த்தியாகவும் இருக்கும் வேர்கள் நிறைய நாட்களுக்கு நன்றாகக் காணப்படும். இந்த வேர்கள் ஆழமாக உட்சென்று பரவி வளர்ந்து காணப்படும். இவ்வகையான வேர்கள் அதிகப்படியான தண்ணீர் மற்றும் சத்துப்பொருட்களை உழ் இழுக்கும்.
மகசூல்
நிலங்களில் அங்கக வேளாண்மையிலிருந்து கரிம மற்ற அமைப்பிற்கு மாற்றினால் இயல்பான சூழலை விட மகசூல் குறைவாகக் காணப்படும். முதன் முதலாக அறுவடை செய்த பிறகு கரிமமற்ற பயிர் வளர்ப்பு அமைப்பில் இருந்து அங்கக பயிர் வளர்ப்பாக நிலங்களை மாற்றும் பொழுது பஞ்சகாவ்யா அனைத்துப் பயிர்களின் மகசூலை பழைய நிலைக்கே மாற்ற உதவும். 15 நாட்களுக்கு முன்னதாகவே அறுவடை செய்ய உதவும். இது காய்கறிகள், பழங்கள் மற்றும் தானியங்களின் வாழ்வு காலத்தை அதிகப்படுத்துவதோடு மட்டுமல்லாமல் அதன் சுவைகளையும் அதிகப்படுத்தும். விலை உயர்ந்த இரசாயனங்களை குறைத்தால் பஞ்சகாவ்யா அதிகப்படியான இலாபத்தையும், அங்கக விவசாயிகளின் கடன் தொகைகளிலிருந்து விடுவிக்க உதவும்.
கடினத்தன்மையுடைய வறட்சி
இலைகள் மற்றும் தண்டுகளின் மேல் மெல்லியதாக சவ்வு போன்று உருவாகும். இதனால் நீராவி ஆகுதல் குறைந்துவிடும். செடிகளில் உருவாகும் ஆழமான மற்றும் விரிவான வேர்கள் வறண்ட காலங்களில் அதிகமான நாட்கள் தாங்கி நிற்கும். மேலே உள்ள இரண்டு காரணிகளும் 30% நீர்ப்பாசனத்தை குறைத்து கடினத்தன்மையுடைய வறட்சியை உறுதிப்படுத்தும்.
5.விலங்குகளின் நலத்திற்கு பயன்படும் பஞ்சகாவ்யா
நுண்ணுயிரி, பாக்டீரியா, பூஞ்சாண், புரதச்சத்து, மாவுச்சத்து, கொழுப்புச்சத்து, அமினோ அமிலங்கள், வைட்டமின், நொதிப்பொருள், வளர்ச்சி ஊக்கக் கூறு, நுண்ணூட்டச்சத்து, எதிர் உயிரியமாக்கி மற்றும் முழுத்தடுப்பாற்றலை அதிகப்படுத்தும் காரணிகள் ஆகியவைகளுக்கு பஞ்சகாவ்யா முக்கியமாகத் திகழ்கின்றது.
விலங்குகள் மற்றும் மனிதர்களில், பஞ்சகாவ்யாவில் இருக்கும் நுண்ணுயிரிகள் முழுத்தடுப்பாற்றலை தூண்டி, உடம்பினுள் கொண்டு செல்லும் நுண்ணுயிரிகளுக்கு எதிராக அதிகப்படியான நோய் எதிர்ப்பொருளை உருவாக்கும். இது நோய்த்தடுப்பாற்றல் மருந்தினை போல் செயல்படும். பஞ்சகாவ்யா விலங்குகள் மற்றும் மனிதர்களின் முழுத்தடுப்பாற்றலை அதிகப்படுத்தும். நோய்த் தாக்குதலில் இருந்து பாதுகாத்து, குணப்படுத்த உதவும். முதிர்ச்சியைக் கட்டுப்படுத்தி நீண்ட நாட்களுக்கு இளமையாக வைத்திருக்க உதவும். பஞ்சகாவ்யாவில் இருக்கும் காரணிகள் பசியார்வம், ஜீரணத்தன்மை, தன்மயாதல் மற்றும் நச்சுத்தன்மையை உடலில் இருந்து அகற்றுதல் உதவி புரியும். மலச்சிக்கலை முழுமையாகக் குணப்படுத்திவிடும். விலங்குகள் மற்றும் மனிதர்களின் முடி மற்றும் தோல்கள் ஆரோக்கியமாக இருக்கும் எடை கூடும்.
பன்றி
பன்றியினுடைய வயது மற்றும் எடையைப் பொருத்து பஞ்சகாவ்யாவை குடிநீரில் கலக்கி ஒரு பன்றிக்கு 10 மி.லி.யில் இருந்து 50 மில்லி வரை கலக்கி ஊட்ட வேண்டும். பன்றிகள் திடமாகவும்,நோய் தாக்குதல் இல்லாமலும் இருக்கும். விரைவாக எடை கூடும். இதனால் பன்றி உரிமையாளர்களுக்கு தீனியின் செலவு குறைந்து எடையும் கூடி அதிகப்படியான இலாபம் கிடைக்கும்.
வெள்ளாடு மற்றும் செம்மறி ஆடு
ஆடுகளின் வயதைப் பொருத்து ஒரு நாளைக்கு ஒரு ஆட்டிற்கு 10.மி.லி.யில் இருந்து 20.மி.லி. வரை பஞ்சகாவ்யாவை கொடுத்தால் அதனுடைய எடை குறுகிய காலத்தில் அதிகமாகி, திடமாகவும் இருக்கும்.
மாடுகள்
மாடுகளுக்கு நாளொன்றுக்கு ஒரு மாட்டிற்கு 100 மி.லி. பஞ்சகாவ்யாவை தீனியிலும், தண்ணீரிலும் கலந்து கொடுத்தால் மாடுகள் திடமாகவும், பால் உற்பத்தி அதிகமாகவும், கொழுப்பும் அதிகமாகி காணப்படும். கருக்கொள்ளுதலின் எண்ணிக்கை அதிகமாகும்.
கருஇணையம், பால்மடி வீக்கம். பாதம் மற்றும் வாய் நோய்களைக் குறைத்துவிடும். மாடுகளின் தோல்களில் நிறைய முடிகளுடனும், மினு மினுப்பாகவும் அழகாகத் தோன்றும். வேலி போடுவதற்கு முன் உலர்ந்த புற்களின் மேல் யூரியாவை தெளிப்பதற்கு பதிலாக சில விவசாயிகள் 3 சதவீதம் பஞ்சகாவ்யா கரைசலை தெளிப்பார்கள். அடுக்கடுக்க உலர்ந்த புற்கள் புளித்துப் போகும். மாடுகளுக்கு பஞ்சகாவ்யா தெளிக்காத புற்களை விட இந்த வகையான உலர்ந்த புற்களையே மாடுகள் விரும்புகின்றது.
கோழி
தினமும் தீனியிலோ அல்லது குடிநீரிலோ ஒரு பறவைக்கு 1.மி.லி. என்ற அளவில் கலந்து கொடுத்து வந்தால் கோழிகளுக்கு நோய் தாக்குதல் இல்லாமல், திடமாக இருக்கும் அதிக காலங்களுக்கு முட்டைகள் இடும். பிராய்லர் குஞ்சுகளின் எடை அதிகமாகும். எடையில் நிலை மாற்றத்தின் விகிதம் அதிகமாகக் காணப்படும்.
மீன்
மீன் குளங்களில் பஞ்சகாவ்யாவை தினமும் மாட்டு சாணத்தில் கலந்து வைக்கவும். இது பாசிகள், களைச்செடிகள் மற்றும் சிறு புழுக்கள் குளத்தினுள் அதிகமாக உருவாகும். இது மீன்களுக்கு உணவுகளை அதிகப்படுத்தும். குளத்தினுள் தேவையான இடைவெளியில் சுத்தமான நீரை மட்டுமே சேர்க்க வேண்டும். சுத்தமான நீரை விடவில்லை என்றால் நீரில் மீன்களுக்கு தேவையான உயிரியம் இல்லாமல் போய்விடும் ற்றும் பாசிகள், களைச்செடிகள், இதர உயிரிகளின் வளர்ச்சி குறைந்துவிடும். எந்திர குலுக்கியையும் நீரில் உயிரியத்தின் அளவை அதிகப்படுத்தப் பயன்படுத்தலாம். 10 மாதத்தில் மீன்களின் எடை இரண்டிலிருந்து மூன்று கிலோ வரை எடை கூடும். இதனால் விரலளவு வளர்ந்த மீன்களின் இறப்பு விகிதம் குறைந்து மீன்களின் எடை கூடும். இதனால் மீன் வளர்ப்பதில் அதிக இலாபம் காணலாம்
Source:TNAU
Leave A Comment
You must be logged in to post a comment.